முக்கிய வினாக்கள்(PART -3)

71)குளத்தங்கரை அரசமரம்  இடம் பெற்ற நூல்?

விடை:- மங்கையர்க்கரசியின் காதல் 

72)தமிழ் சிறுகதையை வளர்த்தது ----------?

விடை:- மணிக்கொடி 

73)சிறுகதையின் முன்னோடிகள் :-

விடை:-  புதுமைப் பித்தன், கு.ப. ராஜகோபாலன்,

 பிச்சமூர்த்தி , மௌனி

74)சிறுகதை மன்னன் , தமிழ்நாட்டின் மாப்பஸான் என்று அழைக்கப்படுபவர்

விடை:- புதுமைப் பித்தன்

75) சிறுகதையின் திருமூலர் என்று புதுமை பித்தரால் அழைக்கப்பட்டவர்

விடை:- மௌனி

76)தமிழில் திறனாய்வை துவக்கி வைத்தவர்

விடை :- மறைமலையடிகள்

77). மறைமலையடிகள் எழுதிய ஆய்வு நூல்கள்

விடை:- இந்தி பொது மொழியா? , மறைமலையடிகள் அறிவுரைக் கோவை, உரைமணிக்கோவை ,

இலக்கிய ஆராய்ச்சி,கால வரலாற்று ஆராய்ச்சி, திருக்குறள் ஆராய்ச்சி,பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி 

78)நரை முடித்து உரை செய்தவர் –

விடை:- கரிகாலன்

79). கல்லணை காட்டியவர்

விடை:- கரிகாலன்

80). முல்லைக்கு தேரினை தந்தவர்

விடை:- பாரி

81). மயிலுக்கு போர்வையை அளித்தவன்

விடை:-  பேகன்

82). முரசுக் கட்டிலில் படுத்து உறங்கியவர்

விடை:-  மோசிக் கீரனார்

83). நெல்லிக்கனி வழங்கப்பட்டவர் –

விடை:- ஒளவையர்

84). நட்பிற்காக கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிருந்து 

உயிர் நீத்தவர்- 

விடை:- பிசிராந்தையார்

85). புலனழுக்கற்ற அந்தணன் என்று பாரட்டப் பெற்றவர்

விடை : கபிலர்

86).குறிஞ்சி பாடுவதில் வல்லவர்

விடை :- கபிலர்

87). பாரியின் நெருங்கிய நண்பர்

விடை :- கபிலர்

88). பெரிய புராணத்தில் பிள்ளை பாதி, புராணம் பாதி

      என்று குறிப்பிடப்படுபவர்

விடை:- திருஞான சம்பந்தர்

89). நின்றசீர் நெடுமாறன் எனப்படும் கூன்பாண்டியனை

சமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர்

விடை:- திருஞான சம்பந்தர்

90). விஜய ரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம்

அரசாங்க கணக்கராய்ப் பணியாற்றியவர்

விடை:- தாயுமானவர்

91). மாயவரத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் 

விடை:-  வேதநாயகம் பிள்ளை

92). குலோத்துங்க சோழனின்  அவைப்புலவராய்

 விளங்கியவர்

விடை:- கம்பர்

93). சடையப்ப வள்ளலார் ஆதரிக்கப்பட்டவர்

விடை :- கம்பர்

94).  விக்டோரியா மகாராணியார் காலையில்

   கண்விழித்ததும் முதலில் படித்த நூல்

விடை:- திருக்குறள் 

95). இந்திய நாட்டை மொழிகளின் காட்சிச்

         சாலை என்று கூறியவர்

விடை:-  மொழியியல் பேராசிரியர் 

ச.அகத்தியலிங்கம்

96). திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்?

விடை:- ஜி யு போப்

97). திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர்?

விடை:-  வீரமாமுனிவர்

98). உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் 

மாளிகையில் உள்ள சுரங்கப் பாதை பெட்டகத்தில் 

வைக்கப்பட்ட நூல்

விடை:-  திருக்குறள்

99). இங்கிலாந்து நாட்டு காட்சிச் சாலையில் 

விவிலியத்துடன்  வைக்கப்பட்ட நூல் –

விடை:- திருக்குறள்

100). தமிழுக்கு தொண்டு செய்வோர் சாவதில்லை

 என்று கூறியவர் :-

விடை:- பாரதி தாசன்

101). உரைநடைக் காலம் எனப்படுவது :-

விடை:-  20ம் நூற்றாண்டு 

102).வால்ட்விட்மனின் சாயலில் உரைநடையை எழுதியவர்

விடை:- பாரதியார்

103).தொல்காப்பியத்தில்  தமிழர்கள் பிறநாடுகளுக்கு

கடற்பயணம் செய்த தகவல் எவ்வாறு குறிப்படுகிறது?

விடை:- முந்நீர் வழக்கம்

104).”நான் தனியாக வாழவில்லை ;

   தமிழோடு வாழ்கிறேன்” என்று கூறியவர்

விடை:- திரு.வி.க

105).ஒளவைக்கு அரிய நெல்லிக் கனியை ஈந்தவன்

விடை:- அதியமான்

106).கான மஞ்சைக்கு கலிங்கம் ஈந்தவன்

விடை:-  பேகன்

107).கடையெழு வள்ளல்களின் ஒருவன்

அ) குட்டுவன் சேரல்               

ஆ)பேகன்

இ) பாண்டியன் உக்கிரப்பெருவழுதி 

ஈ) இராசராசன்

விடை:-  ஆ) பேகன்

108).புறநானுற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில்

 மொழிபெயர்த்தவர்

விடை :- ஜி.யு.போப்

109).தாயுமானவர் ஆற்றிய பணி

விடை:- அரசுக் கணக்கர்

110).சக்கரவர்த்தினி என்ற பத்திரிக்கைக்கு 

ஆசிரியராக பணியாற்றியவர்

விடை:- பாரதியார்