எழுத்திலக்கணம் - எழுத்து
எழுத்து:-
- மொழிக்கு முதற் காரணமாய் ,அணுத்திரளின் காரியமாய் இருப்பது
- எழுத்து இருவகைப்படும்
- ஒலி எழுத்து
- வரி எழுத்து
- ஒலிக்கப்படுவதால் ஒலி எழுத்து எனப்படும்.
- எழுதப்படுவதால் வரி எழுத்து எனப்படும்.
- எழுத்தானது - எண், பெயர், முறை, பிறப்பு , உருவம், மாத்திரை, முதல் எழுத்துக்கள், இறுதி எழுத்துக்கள் , இடைநிலை எழுத்துக்கள், போலி, பதம். புணர்ச்சி என 12 பகுதிகளாக விளக்கப்படும் .( நன்னூல் - பவணந்தி முனிவர்)
எழுத்துக்களின் எண்ணிக்கை
- உயிரெழுத்துக்கள் - 12
- மெய்யெழுத்துக்கள் -18
- உயிர்மெய் - 216
- ஆய்த எழுத்து - 1
மொத்தம் = 247 எழுத்துக்கள்
0 Comments