முக்கிய வினாக்கள்(PART -2)
31) 'பாவேந்தர் ' என அழைக்கப்படுபவர்
அ)காரியாசான்
ஆ) சீத்தலைச் சாத்தனார்
இ)பாரதிதாசன்
ஈ)நம்மாழ்வார்
விடை :- இ)பாரதிதாசன்
32) 'செக்கிழுத்தச் செம்மல் ' எனப் பாராட்டப் பெறுபவர்
அ)அண்ணா
ஆ) பாரதியார்
இ)வ.உ.சிதம்பரனார்
ஈ)கண்ணதாசன்
விடை :- இ)வ.உ.சிதம்பரனார்
33) ‘ பாவலர் ஏறு ' எனப் பாராட்டப் பெறுபவர்
அ)பெருந்தலைச் சாத்தனார்
ஆ) தேவ நேயப் பாவணர்
இ)சோமசுந்தர பாரதியார்
ஈ)பெருஞ்சித்தரனார்
விடை :- ஈ)பெருஞ்சித்தரனார்
34) 'கவியோகி ' என்ற சொல் யாரைக் குறிக்கும்
அ)பூப்ரமணிய பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ)சுத்தானந்த பாரதியார்
ஈ)தேசிய விநாயகம் பிள்ளை
விடை :- இ)சுத்தானந்த பாரதியார்
35) 'நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா ' என யார் யாரை பாராட்டினார்
அ)பாரதிதாசனை பாரதி பாராட்டினார்
ஆ) கவிமணியைப் பாரதி பாராட்டினார்
இ) பாரதியைப் பாரதிதாசன் பாராட்டினார்
ஈ)கண்ணதாசனைப் பாரதிதாசன் பாராட்டினார்
விடை :- இ) பாரதியைப் பாரதிதாசன் பாராட்டினார்
36) 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு ' என்று கூறியவர்
அ)டாக்டர் மு.வ
ஆ) கலைஞர் கருணாநிதி
இ)பேரறிஞர் அண்ணா
ஈ)கணிமேதாவியார்
விடை :- இ)பேரறிஞர் அண்ணா
37) 'யாதும் ஊரை யாவரும் கேளிர் ' என்று பாடியவர்
அ)கபிலர்
ஆ) பரணர்
இ)கணியன் பூங்குன்றனார்
ஈ)ஒளவையார்
விடை :- இ)கணியன் பூங்குன்றனார்
38) 'தமிழுக்கும் அமுதென்று பேர் ' என்று பாடியவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)கண்ணதாசன்
ஈ)வாணிதாசன்
விடை :- ஆ)பாரதிதாசன்
39) 'சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துமே' இவ்வடியைப் பாடியவர்
அ)பாரதிதாசனார்
ஆ)கவிமணி
இ)கண்ணதாசன்
ஈ)பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
விடை :- ஈ)பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
40) 'அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது ' எனக் கூறியவர்
அ)திருவள்ளுவர்
ஆ)கம்பர்
இ)ஒளவையார்
ஈ)இளங்கோவடிகள்
விடை :- இ)ஒளவையார்
41) 'பசித்திரு தனித்திரு விழித்திரு ' எனக் கூறியவர்
அ)பாரதியார்
ஆ)கம்பர்
இ)இராமலிங்கம் பிள்ளை
ஈ)இராமலிங்க அடிகளார்
விடை :- ஈ)இராமலிங்க அடிகளார்
42) 'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே ' எனக் கூறியவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசனார்
இ)கவிமணி
ஈ)நாமக்கல் கவிஞர்
விடை :- ஆ)பாரதிதாசனார்
43) 'கல்வியில்லாத பெண்கள் களர் நிலம் போன்றவர்கள் ' என்று கூறியவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசனார்
இ)வாணிதாசன்
ஈ)முடியரசன்
விடை :- ஆ)பாரதிதாசனார்
44) 'சாதி இரண்டொழிய வேறில்லை ' என்று கூறியவர்
அ)பாரதிதாசனார்
ஆ)கணியன் பூங்குன்றனார்
இ)ஒளவையார்
ஈ)பாரதியார்
விடை :- இ)ஒளவையார்
45) 'தமக்கென முயலா நோன்றாள் ' இவ்வடிகள் பயின்று வரும் நூல்
அ)கம்பராமாயணம்
ஆ)சீவக சிந்தாமணி
இ)பெரிய புராணம்
ஈ)புறநானூறு
விடை :- ஈ)புறநானூறு
46) 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று கூறியவர்
அ)பாரதியார்
ஆ)கவிமணி
இ)வள்ளுவர்
ஈ)திருமூலர்
விடை :- இ)வள்ளுவர்
47) 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்று கூறியவர்
அ)சேக்கிழார்
ஆ)சுந்தரர்
இ)அப்பர் அடிகள்
ஈ)திருமூலர்
விடை :- ஈ)திருமூலர்
48) 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே ' என்று பாடியவர்
அ)திருவள்ளுவர்
ஆ)பரணர்
இ)ஒளவையார்
ஈ)செம்புலப் பெயனீரார்
விடை :- இ)ஒளவையார்
49) 'தீதும் நன்றும் பிறர் தர வாரா ' இக்கூற்றைச் சொன்ன புலவர் யார் ?
அ)ஒளவையார்
ஆ)பொன்முடியார்
இ)கணியன் பூங்குன்றனார்
ஈ)கபிலர்
விடை :- இ)கணியன் பூங்குன்றனார்
50) நாடகங்கள் குறித்த குறிப்புகள் காணப்படும் நூல்கள்
விடை :- தொல்காப்பியம் மற்றும் சிலப்பதிகாரம்
51) தஞ்சை கல்வெட்டு குறிப்பிடும் நாடகம்
விடை:- இராஜா ராஜவிஜயம்
52) செய்யுள் நாடகங்கள் எவை ?
விடை:- குறவஞ்சி , நொண்டி, பள்ளு
53) தமிழ் தாய் வாழ்த்து எடுக்கப்பட்ட நாடக நூல்
விடை:- மனோன்மணியம்
54) மனோன்மணியம் லிட்டன் பிரபு எழுதிய ____________ நூலின் தழுவல்
விடை:- இரகசிய வழி
55) தமிழ் தாய் வாழ்த்து எடுக்கப்பட்ட மனோன்மணியம் நாடகத்தை எழுதியவர்
விடை:- பெ . சுந்தரம் பிள்ளை
56) மனோன்மணியம் நாடகம் ஒரு -----------
விடை:- செய்யுள் நாடகம்
57)தமிழ் நாடகத்தின் தொடக்கம் ---------------நாடகம்
விடை :- மனோன்மணியம் என்ற செய்யுள் நாடகம்
58)காளிதாஸரின் சாகுந்தலம் என்ற நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்
விடை:- மறைமலையடிகள்
59)தமிழின் முதல் சமூக நாடகம்
விடை:- டாம்பச்சாரி விலாசம்
60)சுகுண விலாச சபையை தோற்றுவித்தவர்
விடை:- பம்மல் சம்பந்த முதலியார்
61)மனோகரா , சபாபதி நாடகங்களை எழுதியவர்
விடை :- பம்மல் சம்பந்த முதலியார்
62)நாடகக் கலை என்ற நூலை எழுதியவர்
விடை:- ஒளவை சண்முகம்
63)ஓர் இரவு என்ற நாடகத்தை ஒரே இரவில் எழுதி முடித்தவர்
விடை :- பேரறிஞர் அண்ணா
64)பேரறிஞர் அண்ணாவை தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்று அழைத்தவர்
விடை:- கல்கி
65)பேரறிஞர் அண்ணாவை தமிழ் நாட்டின்
பெர்னாட்ஷா என்று அழைக்க காரணமாக இருந்த நூல்
விடை:- ஓர் இரவு
66)சேவா ஸ்டேஜ் என்ற அமைப்பை தோற்றுவித்தவர்
விடை:- எஸ்.வி. சகஸ்ரநாமம்
67)கூத்துப் பட்டறை என்ற அமைப்பை தோற்றுவித்தவர்
விடை:- ந.முத்து சுவாமி
68)சிறுகதை காலம்------------- ஆகும்
விடை:- 20 ஆம் நூற்றாண்டு
69)சிறுகதையின் இலக்கணத்திற்குட்பட்ட தமிழின் முதல் சிறுகதை நூல்
விடை:- குளத்தங்கரை அரச மரம் சொன்ன கதை
70)குளத்தங்கரை அரசமரம் என்ற நூலை எழுதியவர்
விடை :- வ.வே.சு ஐயர்
0 Comments