PreviousYearQuestions-(Part 4)

1)சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து 
வாழ்த்துவமே -இவ்வடியைப் பாடியவர் 
அ.பாரதிதாசனார்
ஆ.கவிமணி 
இ.கண்ணதாசன் 
ஈ.பேராசிரியர் சுந்தரம்பிள்ளை 
விடை:-ஈ.பேராசிரியர் சுந்தரம்பிள்ளை 

2)தெய்வ நூல் என்று சிறப்பிக்கப்படும் நூல் 
அ.திருவாசகம் 
ஆ.திருவிளையாடற்புராணம் 
இ.பெரிய புராணம் 
ஈ.திருக்குறள் 
விடை:-ஆ.திருவிளையாடற்புராணம் 

3)நல்ல எனும் அடைமொழியிட்டு குறிக்கப்படும் நூல்  
அ.நற்றிணை 
ஆ.குறுந்தொகை 
இ.ஐங்குறுநூறு 
ஈ.கலித்தொகை  
விடை:-ஆ.குறுந்தொகை 

4)மணநூல் என்று அடைமொழியால் அழைக்கப்பெறும் நூல் 
அ.திருக்குறள் 
ஆ.சீவக சிந்தாமணி 
இ.கம்பராமாயணம் 
ஈ.பெரியபுராணம் 
விடை:-ஆ.சீவக சிந்தாமணி 

5)உலகப் பொதுமறை என்ற சிறப்புடைய நூல் 
அ.புறநானூறு 
ஆ.பட்டினப்பாலை 
இ.திருக்குறள் 
ஈ.நான்மணிக்கடிகை 
விடை:-இ.திருக்குறள்

6)தொடரும் தொடர்பும் அறிதல் 
திருத்தொண்டர் புராணம் என்று அழைக்கப் பெறும் நூல் 
அ.மணிமேகலை 
ஆ.பெரிய புராணம் 
இ.திருவிளையாடற்புராணம் 
ஈ.சீறாப்புராணம் 
விடை:-ஆ.பெரிய புராணம் 

7)பிரித்தெழுதுக - புறநாநூறு 
1.புற+நூறு 
2.புறம்+நூறு 
3.புறம்+நான்கு+நூறு 
4.புற +அம்+நான்கு+நூறு 

அ. 1 சரியான விடை 
ஆ. 2 சரியான விடை 
இ. 3 சரியான விடை 
ஈ. 4 மற்றும் 2  சரியான விடை 

விடை :- இ . 3  சரியான விடை 

8)பிரித்தெழுதுக - தெங்கம்பழம்
அ.தேங்காய்+பழம்
ஆ.தெங்கு+அம்+பழம் 
இ.தெங்கம்+பழம் 
ஈ.தெங்+கம்+பழம் 
விடை:-ஆ.தெங்கு+அம்+பழம் 

9)நம்மூர் என்ற சொல்லை பிரித்துணர்ந்து எது சரி,எது தவறு என்று விடை தேர்க 
அ.நன்+ஊர்  
ஆ.நன்மை+ஊர் 
இ.நல்+ஊர் 
ஈ.நம்+ஊர் 
விடை:-ஈ.நம்+ஊர் 

10)பிரித்தெழுதுவதில் சரியானதைத் தேர்க- மற்றோர்  
அ.மற்று+ஓர்
ஆ.மரு+ஓர் 
இ.மறுமை+ஓர் 
ஈ.மறு+ஒன்று 
விடை:-அ.மற்று+ஓர்

11)இடும்பை -எதிர்ச்சொல் தருக 
அ.அவலம் 
ஆ.இன்பம் 
இ.தொல்லை 
ஈ.துன்பம் 
விடை:-ஆ.இன்பம் 

12)எதிர்ச்சொல் தருக- வன்மை 
அ.மென்மை
ஆ.தன்மை 
இ.கருமை 
ஈ.செம்மை 
விடை:-அ.மென்மை

13)நஞ்சு-எதிர்ச்சொல் குறிக்க 
அ.விடம் 
ஆ.அமிழ்தம் 
இ.சாவு 
ஈ.மருந்து 
விடை:-ஆ.அமிழ்தம் 

14)எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக-வாழ்த்து 
அ.பாராட்டு 
ஆ.வீழ்த்து 
இ.சிரிப்பு 
ஈ.அழித்தல்
விடை:-ஆ.வீழ்த்து 

15)உறவு என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க 
அ.கோபம் 
ஆ.வெறுப்பு 
இ.அன்பு 
ஈ.பகை 
விடை:-ஈ.பகை 

16) பொருந்தச் சொல்லைத் தேர்ந்தெடு  
அ.அகநானூறு 
ஆ.புறநானூறு 
இ.பதிற்றுப்பத்து 
ஈ.திருமுருகாற்றுப்படை 
விடை:-ஈ.திருமுருகாற்றுப்படை 

17)பொருந்தச் சொல்லைத் தேர்ந்தெடு 
அ. கூகை 
ஆ.மயில் 
இ. கோழி 
ஈ. சிங்கம் 

விடை :- ஈ. சிங்கம் 

18)பொருந்தச் சொல்லக் கண்டறிக 
அ.காரைக்கால் அம்மையார் 
ஆ.ஆண்டாள் 
இ.மங்கையர்க்கரசி 
ஈ.பாண்டியன் நெடுஞ்செழியன் 
விடை:-ஈ.பாண்டியன் நெடுஞ்செழியன் 

19)பொருந்தச் சொல்லக் கண்டறிக 
அ.ஆண்
ஆ.பெண் 
இ.குரங்கு 
ஈ.குழந்தை 
விடை:-இ.குரங்கு 

20)பொருந்தச் சொல்லைக் கண்டறிதல் 
அ.மலர் 
ஆ.அலர் 
இ.அரும்பு 
ஈ.கரும்பு 
விடை:-ஈ.கரும்பு



21) சந்திப்பிழை நீக்கியதை தேர்வு செய்க 
அ.இராமன் காட்டிற்கு சென்று பழங்களை பறித்தான் 
ஆ.இராமன்க் காட்டிற்குச் சென்று பழங்களை பரித்தான்
இ.இராமன் காட்டிற்குச் சென்று பழங்களைப்  பறித்தான் 
ஈ.இராமன் காட்டிற்க்குச் சென்று பலம்களைப் பரித்தான்

விடை:- இ.இராமன் காட்டிற்குச் சென்று பழங்களைப்  பறித்தான் 
 

22)பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க 
அ.ஆத்தங்கரையில் அஞ்சு கானி  நிலம் உள்ளது 
ஆ.ஆற்றங்கரையில் ஐந்து காணி நிலம் உள்ளது 
இ.ஆற்றங்கரையில் அஞ்சி காணி நிலம் உள்ளது.
ஈ.ஆத்தங்கரையில் ஐந்து காணி நிலம் உள்ளது.
விடை:-ஆ.ஆற்றங்கரையில் ஐந்து காணி நிலம் உள்ளது 

23)பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க 
அ.வெண்ணெய் விலை ஏறிப்போச்சு
ஆ.வெண்ணெய் விலை ஏறிப் போச்சு
இ.வெண்ணை விலை ஏறிப் போயிற்று  
ஈ.வெண்ணெய்  விலை ஏறிப் போயிற்று  
விடை:-ஈ.வெண்ணெய்  விலை ஏறிப் போயிற்று  

24)பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர் தேர்க 
அ.இராமலிங்க சுவாமிகள் கடவுளை ஜோதி வடிவில் வழிபட்டார்
ஆ.இராமலிங்க அடிகள் கடவுளை ஒளி வடிவில் வழிபட்டார் 
இ.இராமலிங்க சுவாமிகள் கடவுளை ஒளி வடிவாய் வழிபட்டார் 
ஈ.இராமலிங்க அடிகள் கடவுளை ஜோதி வடிவில் வழிபட்டார் 
விடை:-இ.இராமலிங்க சுவாமிகள் கடவுளை ஒளி வடிவாய் வழிபட்டார் 

25)ஒருமை,பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக 
அ.பசுங்கன்றுகள் துள்ளி ஓடின 
ஆ.பசுங்கன்றுகள் துள்ளி ஓடியது  
இ.பசுங்கன்று துள்ளி ஓடின 
ஈ.பசுங்கன்றுகள் துள்ளி ஓடாது 
விடை:-அ.பசுங்கன்றுகள் துள்ளி ஓடின  

26)ஒருமை பன்மை பிழைகளை நீக்குக 
அ.நீயும் நானும் வந்தேன் 
ஆ.நீயும் நானும் வந்தீர்கள்  
இ.நீயும் நானும் வந்தன 
ஈ.நீயும் நானும் வந்தோம் 
விடை:-ஈ.நீயும் நானும் வந்தோம் 

27)வழூவுச் சொற்களை நீக்குக 
அ. இங்கிட்டு வா  
ஆ.இங்கிட்டு வராதே
இ. இங்கே வா 
ஈ. இங்கினே வா 

விடை :- இ. இங்கே வா 

28)மரபுப் பிழைகளை நீக்குக 
அ.தென்னம்பிள்ளை 
ஆ.தென்னம் நாற்று 
இ.தென்னங் குட்டி 
ஈ.தென்னங்கன்று 
விடை:-அ.தென்னம்பிள்ளை 

29)மரபுப் பிழைகளை நீக்குக 
அ.மயில் அகவும்
ஆ.மயில் பிளிறும் 
இ.மயில் சீறும்
ஈ.மயில் கத்தும்
விடை:-அ.மயில் அகவும்

30)ஒருமை , பன்மை பொருந்தியுள்ள தொடரைக் குறிப்பிடுக 
அ.தமிழ்நாட்டு மாணவர் நல்லொழுக்கம் உடையவர்கள் 
ஆ.தமிழ்நாட்டு மாணவர்கள் நல்லொழுக்கம் உடையவர்கள் 
இ.தமிழ்நாட்டு மாணவர்கள் நல்லொழுக்கம் உடையவர் 
ஈ.தமிழ்நாட்டு மாணவர்கள் நல்லொழுக்கம் உடையனர் 
விடை:-ஆ.தமிழ்நாட்டு மாணவர்கள் நல்லொழுக்கம் உடையவர்கள்

31) வழூவுச் சொற்கள் திருத்தம் அறிக 
அ. எளநீர் குடித்தால் சிலவு அதிகம் .
ஆ. எளநீர் குடித்தால் செலவு அதிகம். 
இ. இளநீர் குடித்தால் சிலவு அதிகம். 
ஈ. இளநீர் குடித்தால் செலவு அதிகம்.
விடை:-  ஈ. இளநீர் குடித்தால் செலவு அதிகம்.

32) மரபுச் சொற்கள் சரியாக அமைந்துள்ளதை அறிக 
அ. பனை இலையால் கூரை போட்டான் 
ஆ. பனை இலையால் கூரை வேய்ந்தான்
இ. பனை ஓலையால் கூரை வேய்ந்தான்
ஈ. பனை ஓலையால் கூரை போட்டான் 
விடை:- இ. பனை ஓலையால் கூரை வேய்ந்தான் 

33) மரபுப் பிழைகள், வழூவுச் சொற்களை நீக்கியவை குறிக்க  
அ. சேவல் கூவ பொழுது விடிந்தது.
ஆ. சேவல் கொக்கரிக்க பொழுது புலர்ந்தது.
இ. சேவல் கூவ பொழுது புலர்ந்தது.
ஈ.  சேவல் கொக்கரிக்க பொழுது விடிந்தது.
விடை:- இ. சேவல் கூவ பொழுது புலர்ந்தது.

34)பிறமொழிச் சொற்களற்ற வாக்கியம் அறிக 
அ. டிவியில படம் ஜோரா தெரிகிறது.
ஆ. டிவியில படம் நன்றாகத் தெரியுது.
இ. தொலைக்காட்சியில் படம் ஜோரா தெரியுது..
ஈ.  தொலைக்காட்சியில் படம் நன்றாகத் தெரிகிறது.
விடை:- ஈ.  தொலைக்காட்சியில் படம் நன்றாகத் தெரிகிறது.

35) பிறமொழிச் சொற்களற்ற வாக்கியம் அறிக  
அ.பஸ் பாஸ்டா போவுது.
ஆ. புஷ்ப தோட்டத்தில் சர்ப்பம் கண்டேன்.  
இ. பீரோவில் புஸ்தகம் வைக்க கஷ்டமா ?
ஈ. பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்யாதே! 
விடை:- ஈ. பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்யாதே! 

36) பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய் 
அ.நெல் உற்பத்தியில் தஞ்சைச் சிறந்து விளங்குகிறது.
ஆ.நெல் உற்பத்தியில் தஞ்சை சிறந்து விளங்குகிறது. 
இ. நெல் உற்ப்பத்தியில் தஞ்சை சிறந்து விளங்குகிறது.
ஈ. நெல் உற்ப்பத்தியில் தஞ்சைச் சிறந்து விளங்குகிறது.
விடை:- ஆ.நெல் உற்பத்தியில் தஞ்சை சிறந்து விளங்குகிறது. 

37) பிறமொழிச் சொற்களை நீக்கி விடை குறிக்க 
அ.இன்லெண்டு லெட்டரை போஸ்ட்பாக்ஸில் போடவும். 
ஆ.உள்நாட்டுக் கடிதத்தை அஞ்சல் பெட்டியில் போடவும்.
இ.உள்நாட்டு லெட்டரை போஸ்ட் பாக்ஸில் போடவும்.
ஈ.உள்நாட்டு லெட்டரை அஞ்சல் பாக்ஸில் போடவும்.
விடை:- ஆ.உள்நாட்டுக் கடிதத்தை அஞ்சல் பெட்டியில் போடவும்.

38) பிறமொழிச் சொல் கலவாத வாக்கியத்தை தெரிவு செய்க 
அ.சென்ட்ரல் கவர்மென்ட் திட்டத்தை வகுத்தது.
ஆ.ஸ்டேட் கவர்மென்ட் திட்டத்தை வகுத்தது.
இ.மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து திட்டத்தை வகுத்தது.
ஈ.பிறமொழி சொல் கலந்த வாக்கியம் எதுவுமே இல்லை  
விடை:- இ.மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து திட்டத்தை வகுத்தது.

39)ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.
கேர்புலாக நடந்து கொள்
அ.சரியாக நடந்து கொள் 
ஆ.மதிக்குமாறு நடந்து கொள் 
இ.கவனமுடன் நடந்து கொள் 
ஈ.புரிந்து கொண்டு நடந்து கொள் 
விடை:- இ.கவனமுடன் நடந்து கொள் 

40)ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க 
அவன் சென்டரில் உள்ளன. 

அ.ஓரத்தில் 
ஆ.நடுவில் 
இ.முதலில் 
ஈ.கடைசியில் 
விடை:- ஆ.நடுவில்

41) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தேர்க 
அ. பஸ்ஸில் பயண டிக்கெட் வாங்கு 
ஆ.பேருந்தில் பயண டிக்கெட் வாங்கு 
இ. .பேருந்தில் பயணச் சீட்டு வாங்கு 
ஈ.பஸ்ஸில்  பயணச் சீட்டு வாங்கு 
விடை:- இ. .பேருந்தில் பயணச் சீட்டு வாங்கு 

42) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொற்களை எழுது
அ. ஸ்கூலில் பஸ்ட் மாணவனாக விளங்கு 
ஆ.பள்ளியில் முதல் மாணவனாக விளங்கு 
இ.ஸ்கூலில் முதல் மாணவனாக விளங்கு 
ஈ. பள்ளியில் பஸ்ட் மாணவனாக விளங்கு 
விடை:- ஆ.பள்ளியில் முதல் மாணவனாக விளங்கு 

43) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக
காகிதம் பிரிண்ட் செய்யப்பட்டது.
அ. காகிதம் கட்டாக செய்யப்பட்டது.
ஆ.காகிதம் அச்சடிக்கப்பட்டது.
இ. காகிதம் கோர்வை செய்யப்பட்டது.
ஈ.  காகிதம் சேமிப்பு செய்யப்பட்டது
விடை:- ஆ.காகிதம் அச்சடிக்கப்பட்டது.

44)ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக 
          தலை                   தளை                   தடை 
அ   உடல் உறுப்பு      சேர்த்தல்              போக்குதல் 
ஆ. மூலை                    பாவகை               தடுப்பு 
இ. உடல் உறுப்பு        கட்டு                      தடுத்தல்  
ஈ. மூளை                      வயல்வெளி         தடைப்படுத்தல் 
விடை:-இ. உடல் உறுப்பு        கட்டு                      தடுத்தல்  

45) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக 
          மறை                     மரை                   மழை                    மலை
அ  மறைபொருள்         தாமரை             மேகம்                    பூமி 
ஆ. வேதம்                      மான்                    வான்மழை          உயர்ந்த 
                                                                                                        மலைப்பகுதி  
இ. மறைத்தல்               காற்று                 விண்                      மணல்      
ஈ. மறைந்த                    முகுகில்              வானம்                   கிணறு 
விடை:-ஆ. வேதம்                      மான்                    வான்மழை          உயர்ந்த மலைப்பகுதி  
                                                                                                              
46)ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக 
          தால்                       தாள்                      தாழ்
அ   உறுப்பு                     எழுத்து                 அடை
ஆ. கீழே                          முடி                       குனி 
இ. மூக்கு                         மேன்மை             அடிப்பணி 
ஈ.நாக்கு                          பாதம்                    தாழ்ப்பாள் 
விடை:-ஈ.நாக்கு                          பாதம்                    தாழ்ப்பாள் 


47) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக 
          வலி                            வளி                    வழி
அ   வலிமை                       வானம்               சாலை 
ஆ. நோய்                           வள்ளள்மை       வழித்தல்
இ. கடுமை                         காற்று                 வீழ்தல்  
ஈ.வலிமை                         காற்று                  சாலை 
விடை:-ஈ.வலிமை                         காற்று                  சாலை 
 
48) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக 
          தன்மை                     தண்மை             நன்மை   
அ  தனிமை                         நீண்ட                 பலன் 
ஆ. நல்விதம்                       குளிர்ந்த            நல்ல பலன் 
இ. இதமான                        இணைந்த          வருவாய் 
ஈ.ஏற்புடைய                      ஒருமைப்பாடு     சேரும் 
விடை:-ஆ. நல்விதம்                       குளிர்ந்த            நல்ல பலன் 

49)ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல் 
மா
அ.யானை 
ஆ.பூனை 
இ.கரடி 
ஈ.விலங்கு 
விடை:- ஈ.விலங்கு 

50)கா என்பதன் பொருள் 
அ.காற்று 
ஆ.தோப்பு 
இ.சோலை 
ஈ.காசு 
விடை:- இ.சோலை