புகழ் பெற்ற ஆசிரியர்களின் மேற்கோள்கள் -(பகுதி–1)

`
ஆசிரியர் முக்கிய மேற்கோள்
ஐயனாரிதனார் "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே –வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி"
நக்கீரர் "உண்பது நாழி உடுப்பவை ரெண்டே "(புறநானூறு)
"செல்வத்துப் பயனே ஈதல் " (புறநானூறு)
கணியன் பூங்குன்றனார் "யாதும் ஊரே யாவரும் கேளிர் "(புறநானூறு)
“தீதும் நன்றும் பிறர்தர வாரா”( புறநானூறு)
“பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தலும் அதனினும் இலமே”( புறநானூறு)
குடப்புலவியனார் “உண்டு கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே உண்பது நாழி , உடுப்பவை இரண்டே” (புறநானூறு)
நரிவெரூ உத்தலையார் “நல்லது செய்தல் ஆற்றிராயினும் அல்லது செய்தல் ஓம்புமீன்”( புறநானூறு)
பக்குடுக்கை நண்கணியார் “இன்னாது அம்ம இவ்வுலகம்” ( புறநானூறு)
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி “உண்டால் அம்ம இவ்வுலகம்” ( புறநானூறு)
"தமக்கென முயலா நோன்தான் பிறர்க்கென முயலுநர் உண்மையானே "
பொன்முடியார் "ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே"( புறநானூறு)
பாண்டியன் அறிவுடை நம்பி "மயக்குறு மக்களை இல்லோர்க்கும் பயக்குறை இல்லை ( புறநானூறு)
மதுரை இளநாகனார் அறநெறி முதற்றே அரசின் கொற்றம்( புறநானூறு)
கோவூர்க்கிழார் அறவே ஆயின் நினதுஎனக் திறத்தல் ,மறவை ஆயின் போரொடு திறத்தல்( புறநானூறு)
புறநானூறு மன்னவன் உயிர்த்தே மலர் தலை உலகம்
ஒளவையார் கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு
அரிது அரிது மானிடராதல் அரிது
“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”
ஆத்தி சூடி:- அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் , ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல், எண் எழுத்து இகழேல் , ஏற்பது இகழ்ச்சி, ஐயம் இட்டு உண், ஒப்புரவு ஒழுகு, ஓதுவது ஒழியேல், ஒளவியம் பேசேல் , அஃகம் சுருக்கேல்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
குற்றம் பார்க்கின் சுற்றமில்லை
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
பசி வந்திடப் பத்தும் பறக்கும்
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ ?
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
சாதி இரண்டொழிய வேறில்லை
ஊருடன் கூடி வாழ்
பசித்து புசி
நாடாகு ஒன்றோ ;காடாகு ஒன்றோ ; அவலாகு ஒன்றோ ; மிசையாகு ஒன்றோ ; எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை; வாழிய நிலனே ! ( புறநானூறு)
கலித்தொகை பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்